கோவாவில் நடந்துவரும் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் திரையிடப்பட்டது.
விசாரணை திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டபின் அதன் மீதான கவனம் குவிந்து வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தை ரசிகர்கள் நின்று கொண்டே பார்த்தனர். அந்தளவு கூட்டம் திரையரங்கில் நிரம்பி வழிந்தது.
படம் முடிந்த பிறகு சில நிமிடங்கள் நிற்காமல் கரவொலி எழுப்பப்பட்டது. இந்த வரவேற்பு விசாரணைக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.