கோவா திரைப்பட விழா - மத்திய அரசின் சிறப்பு விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (09:56 IST)
கோவா திரைப்பட விழாவில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரை பிரமுகருக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்த விருதை ரஜினிக்கு வழங்கினார்.
 
விருது பெற்ற ரஜினிகாந்த் பேசும்போது, ''கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஐந்தாறுமுறை வர முயற்சி செய்தேன். முடியவில்லை. இப்போது இங்கு வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.
 
மத்திய அரசு தந்திருக்கும் இந்த விருதை கவுரவமாகக் கருதுகிறேன். இந்த விருதைத் தந்த மத்திய அரசுக்கும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
 
மேலும், ‘தனக்குக் கிடைத்த விருதை தனது வெற்றிக்கு உதவிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக‘ அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்