2014 -ஐ மறக்க முடியாத வருடமாக்கிய கமல்

புதன், 1 அக்டோபர் 2014 (10:45 IST)
இந்த வருடத்தை மறக்க முடியாது என்று இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறினார்.
 
வாகை சூட வா படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் சக இசையமைப்பாளர்களால் பொறாமையுடன் நோக்கப்படும் அளவுக்கு சரசரவென வளர்ந்து நிற்கிறார். 
 
வாகை சூட வா, வத்திக்குச்சி, குட்டிபுலி, நய்யாண்டி, அமரகாவியம், திருமணம் எனும் நிக்ஹா என படங்களின் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என கமலின் மூன்று படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பது இன்னொருபுறம்.
 
இளையராஜாவுக்குப் பிறகு கமல் நடிக்கும் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைக்கும் வாய்ப்பு பெற்றவர் ஜிப்ரான் மட்டுமே. இதுபற்றி கருத்து தெரிவித்தவர், இந்த ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டு என கூறினார். விரைவில் உத்த வில்லன் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்