இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைக்காத பெருமை ஜிப்ரானுக்கு கிடைத்தது எப்படி?
புதன், 7 ஜூன் 2017 (23:19 IST)
இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருமே சமீபத்தில் மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமானுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் தனித்தனியே, சேர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டும் சினிமாவுக்கு பாட்டெழுத அப்துல்ரகுமான் மறுத்துவிட்டார். இதை இருவருமே பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.
ஆனால் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'ஆண் தேவதை' படத்திற்காக தனது கவிதைகளில் ஒன்றை கொடுத்துள்ளார் அப்துல்ரகுமான். ஜிப்ரான் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த கவிதையை வாங்கி கொண்டுபோய் அதற்கேற்றவாறு மெட்டமைத்து அதை ஒரு பாடலாக உருவாக்கும் முன் எதிர்பாராதவிதமாக அப்துல்ரகுமான் மறைந்துவிட்டார். இது ஜிப்ரானை ரொம்பவே உலுக்கிவிட்டதாம்
தற்போது இந்த பாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜிப்ரான், அப்துல்ரகுமானின் ஆத்மா இந்த பாடலை கேட்கும் என தான் நம்புவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த பாடல் இதுதான்: