தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரியின் வெற்றி, எப்படி நடித்தாலும் படம் ஓடும் என்ற எண்ணத்தை தனுஷிடம் ஏற்படுத்தி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் நடிக்க வைத்தது.
அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிவரும் கௌதம், அடுத்து தனுஷ், ஜெயம் ரவி நடிப்பில் தலா ஒரு படம் இயக்குகிறார். தனுஷ் நடிக்கும் படத்துக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தனுஷும், கௌதம் படத்தில் முதலில் நடிக்கிறேன் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.