ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தத் தகவலை கௌதமே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
லிங்காவுக்குப் பிறகு என்ன பண்ணலாம் என்று ரஜினி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கௌதம் அவரை சந்தித்து கதை கூறியிருக்கிறார். இந்த விஷயம் எப்படியோ லீக்காகி பத்திரிக்கைகளிலும் அப்போது வந்தது. நாமதான் அடுத்த ரஜினிபட இயக்குனர் என அவர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ரஞ்சித் அந்த வாய்ப்பை தட்டிச் சென்றார்.