கணேஷ் - ஆர்த்தி விவாகரத்து: வாட்ஸ் ஆப் வைரல்

ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:35 IST)
நடிகை குண்டு ஆர்த்தியும், அவரது கணவர் கணேஷும் விவாகரத்து செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரவியது. இது குறித்து ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
கணேஷுக்கும் எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். தற்போது விவாகரத்து தான் டிரெண்ட். நாங்கள் டிரெண்டில் இருக்கிறோம்.
 
கணவன், மனைவி இடையே பிரச்சனை வர வேண்டும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. கணவன் மனைவி பிரச்சனை இல்லாமல் வாழ்ந்தால் அவர்களை பற்றி யாரும் பேச மாட்டார்கள். பிரச்சனை வந்தால் தான் அவர்களை பற்றி பேசுவார்கள்.
 
சனிக்கிழமை நானும், கணேஷும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். நாங்கள் ஜோடியாக சென்றதை யாரும் பார்க்கவில்லை. விவாகரத்து கொடுத்தால் அது சுதந்திரம் கொடுப்பது ஆகும். நான் கணேஷை ஆயுள் சிறையில் வைத்துள்ளேன்.
 
இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்