ஸ்டுடியோ கிரீனிடமிருந்து நழுவிய பாகுபலி 2

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:43 IST)
பாகுபலி இரண்டாம் பாகத்தின் தமிழ் திரையரங்கு உரிமையை 45 கோடிகளுக்கு ஸ்டுடியோ கிரீன் விலைபேசியதாக தகவல்கள் வந்தநிலையில், புதிய நிறுவனம் ஒன்று பாகுபலி 2 படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது. 


 
 
எஸ்.என்.ராஜராஜன் என்பவரின் கே. புரொடக்ஷன்ஸ் பாகுபலி இரண்டாம் பாகத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. அத்துடன் இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளின் வெளிநாட்டு உரிமைகளையும் இந்நிறுவனமே வாங்கியுள்ளது. 
 
பாகுபலியில் வில்லனாக நடித்து வரும் ராணாவை வைத்து, மடை திறந்து என்ற தமிழ்ப் படத்தை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்