சுருதிஹாசனுக்கு விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லையாம்!!

சனி, 15 அக்டோபர் 2016 (11:01 IST)
நடிகை சுருதிஹாசன் பேட்டி ஒன்றில் கூறும்போது “தெலுங்கில் நான் நடித்துள்ள பிரேமம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 

 

இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னால் நான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி இணையதளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவதூறான கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள். வேலையில்லாமல் வெட்டியாய் இருப்பவர்கள் இதுமாதிரியான காரியங்களை செய்கிறார்கள் என்று நினைத்தேன்.
 
ஆகவே அதுபற்றி நான் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. கதையின் மீதும், காதாபாத்திரம் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்தேன். படம் திரைக்கு வந்த பிறகு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். 
 
விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். ”என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். மேலும் இது போன்ற விமர்சனங்களும், அவதூறுகளும் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இனியும் ஏற்படுத்த போவதில்லை என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்