பாக்யராஜ் மகன் சாந்தனுவும் விஜய்யின் தீவிர ரசிகர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாந்தனு, இவரின் திருமணத்திற்கு விஜய் சென்ற போது திடிரென இளையதளபதியை தாலி எடுத்து தரச்சொல்லி திருமணம் செய்து கொண்டார். இதை விஜய் தன் மனைவி சங்கீதாவிடம் கூறிய போது அவர் கோபப்பட்டாராம். தாலியெல்லாம் வயதில் பெரியவர்கள் தான் எடுத்து தரவேண்டும் நீங்கள் ஏன் எடுத்து தந்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதை விஜய் சாந்தனுவிடம் சொல்ல, என்னை பொறுத்தவரை பெரியவர்கள் என்பதை விட மனதிற்கு பிடித்தவர்கள் செய்வதுதான் முக்கியம் என்று கூறினாராம் சாந்தனு. இதனை அடுத்து திருமணம் முடிந்தபின் முதல் விருந்தையும் விஜய்தான் கொடுத்துள்ளார்.