இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. முழுக்க வெளிநாட்டில் படமாகும் படமிது. இந்தப் படத்துக்கு மகாபாரத கதாபாத்திரமான துருவனின் பெயர் வைக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், படத்தின் பெயரை தயாரிப்பாளர் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.