பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனுடனான திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். குறிப்பாக தமிழில் ‘எந்திரன்’, மணிரத்னம் மூன்று மொழிகளில் இயக்கிய ‘ராவணன்’ போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். கடைசியாக இவர், 2010ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோஷனுடன் ’குஷாரிஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது சஞ்சய் குப்தா இயக்கத்தில், இர்ஃபான் கான், சப்னா ஆஷ்மி, அனுபம் கேர் ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் ’ஜஸ்பா’. இந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் ஐஸ்வர்யா முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.