பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைக்கண்டித்து படப்பிடிப்புகள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்தது.
அதன்படி படப்பிடிப்புகள் மட்டுமின்றி டப்பிங், பாடல் பதிவு, எடிட்டிங் உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் முடங்கின.