போலி கையெழுத்து: நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்!

திங்கள், 3 ஏப்ரல் 2017 (15:54 IST)
பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த தம்பதிகள் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

 
அதில் நீதிமன்றத்தில் தனுஷ் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவின் நகலை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை  ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மனுவில் இருப்பது அவருடைய கையெழுத்து இல்லை. அது போலியானது என்று கூறி மனுவின் நகலை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்  கதிரேசன்-மீனாட்சி தம்பதி.
 
மேலும் யார் என்ன சொன்னாலும் தனுஷ் எங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கும் தயார் என்று மேலூரை சேர்ந்த தம்பதிகள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்