இதில் வில்லனாக நடிக்க கமலிடம் ஷங்கர் கேட்டிருந்தார். ஆனால், கமல் முடியாது என மறுத்துவிட்டார். பிறகு விக்ரமை அணுகினர். எந்திரன் 2 போன்ற பிரமாண்ட படத்துக்கு விக்ரம் சரியான தேர்வாக இருக்க மாட்டார் என தயாரிப்பாளர்கள் கருதியதால் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அர்னால்டு கேட்ட சம்பளம் மற்றும் வசதிகள் படத்தின் அறுபது சதவீத பட்ஜெட்டுக்கு நிகரானதாக இருந்ததால் அவருக்குப் பதில் இந்தி நடிகர் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.