எந்திரன் 2 வில்லன் - அர்னால்டுக்குப் பதில் அக்ஷய் குமார்

வியாழன், 17 டிசம்பர் 2015 (15:04 IST)
எந்திரன் 2 படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
எந்திரன் வெற்றியைத் தொடர்ந்து எந்திரன் 2 படத்தை ஷங்கர் இயக்குகிறார். ரஜினி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை லைக்காவும், ஐங்கரனும் இணைந்து தயாரிக்கின்றன.
 
இதில் வில்லனாக நடிக்க கமலிடம் ஷங்கர் கேட்டிருந்தார். ஆனால், கமல் முடியாது என மறுத்துவிட்டார். பிறகு விக்ரமை அணுகினர். எந்திரன் 2 போன்ற பிரமாண்ட படத்துக்கு விக்ரம் சரியான தேர்வாக இருக்க மாட்டார் என தயாரிப்பாளர்கள் கருதியதால் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அர்னால்டு கேட்ட சம்பளம் மற்றும் வசதிகள் படத்தின் அறுபது சதவீத பட்ஜெட்டுக்கு நிகரானதாக இருந்ததால் அவருக்குப் பதில் இந்தி நடிகர் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இந்தியில் 100 கோடி வசூலிக்கும் படங்களின் நாயகன் அக்ஷய் குமார் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்