இந்த இரண்டு கேள்விகளுக்கும் இன்னும் பதில் தெரியாமலிருக்கிறார், ஷங்கர். எந்திரன் 2 படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பார் என செய்தி வெளியான உடனேயே, அப்படியெல்லாம் எதுவுமில்லை, என்னை இதுவரை யாரும் எந்திரன் 2 படத்தில் நடிக்க கேட்கவில்லை என பதிலளித்தார், தீபிகா படுகோன்.
வில்லனாக நடிக்க ஷங்கரின் முதல் சாய்ஸ், கமல். அவர் மறுக்கவே விக்ரமிடம் பேசினார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அமீர் கான், ஷாருக்கான் போன்று முயற்சி செய்யுங்கள் என்று ஷங்கரை வற்புறுத்துகிறது. இந்நிலையில், அர்னால்டிடம் நடிக்கக் கேட்டதாகவும், அவர் 100 கோடி கேட்டதாகவும் உறுதி செய்யப்படாத ஒரு வதந்தி உலவுகிறது.
இன்றுவரை படத்தின் நாயகி, வில்லன் இருவரையும் ஷங்கர் முடிவு செய்யவில்லை என்கிறது, ஷங்கரின் அலுவலக வட்டாராம்.