என்னை அறிந்தால் கன்னட டப்பிங்... நாளை வெளியாகிறது

வியாழன், 2 மார்ச் 2017 (16:06 IST)
கௌதம் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் கன்னட டப்பிங் நாளை கர்நாடகாவில் வெளியாகிறது.


 

பிறமொழிப் படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்வது கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் டப் செய்து சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் சுமார் 60 திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இது கர்நாடக திரைவரலாற்றில் ஆச்சரியமான நிகழ்வு.

1934 மார்ச் 3 -ஆம் தேதியே முதல் கன்னட சினிமா வெளியானது. அந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக என்னை அறிந்தால் கன்னடத்தில் டப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்