2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 4 -ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இன்றி யானை மீது சவாரி செய்வது குற்றமாகும். நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் யானை சவாரி செய்தார்கள் என வெங்கடாசலம் என்பவர் திருச்சூர் பிராணிகள் நல வாரியத்திடம் புகார் தந்திருக்கிறார். இவரும் ஒரு விலங்கு ஆர்வலர்தான்.