கோமாவில் தேசிய விருது பெற்ற எடிடர்

செவ்வாய், 3 மார்ச் 2015 (11:29 IST)
ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டிங்குக்கான தேசிய விருது பெற்றவர் எடிடர் கிஷோர். இளம் திறமைசாலி. இவர் மூளையில் ஏற்பதிட ரத்த அடைப்பு காரணமாக தற்போது கோமா நிலையில் உள்ளார்.
 
ஈரம் படத்தின் மூலம் எடிடரானவர் கிஷோர். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்துக்கு இவர்தான் எடிடர். வெற்றிமாறனின் புதிய படம் விசாரணைக்கும் கிஷோர்தான் எடிடிங் செய்து வந்தார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறன் முன்னிலையில் விசாரணை படத்தின் எடிடிங் வேலைகளில் இருந்தபோது, கிஷோர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பதிடார். அங்கு பரிசோதனை செய்துப் பார்த்ததில், அவரது மூளையில் ப்ளதி கிளாதி - ரத்த அடைப்பு - இருந்தது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
 
எனினும், கிஷோர் இன்னும் கோமா நிலையிலேயே உள்ளார். அவர் உடல்நிலை தேறிவர எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்