பாலியல்ரீதியாக துன்புறுத்தினார் - சர்ச்சை சாமியார் மீது நடிகை புகார்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (10:45 IST)
மோடியின் ஆட்சியில் மனிதஉரிமை ஆர்வலர்களுக்குதான் பாதுகாப்பில்லை. காவி உடுத்திய சாமியார்களுக்கு எந்த எல்லையும் இல்லை. அவர்கள் எந்த பயங்கரவாதத்தையும் தேசபக்தியில் பெயரால் செய்யலாம்.


 

கவர்ச்சி நடிகையைப் போன்று உடையணிந்து, கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார், ராதேமா என்ற சாமியார். இவர் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள். சாமியார் என்ற பின் மோடி அரசியல் நடவடிக்கையை எதிர்பார்க்க முடியுமா? ராதேமாவின் கவர்ச்சி ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்நிலையில், பிரபல நடிகை டாலி பிந்த்ரா, ராதேமாவும் அவரது ஆதரவாளர்களும் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் தந்துள்ளார். அவரது குற்றச்சாட்டுப்பட்டியலில் ராதேமாவுடன் முன்னாள் பஞ்சாப் போலீஸ் அதிகாரியும் உள்ளார்.

இதுவே வேற்று மதத்தினராக இருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ் முதல் லோக்கல் இந்து அமைப்புகள்வரை கொடி பிடித்திருக்கும். ராதேமா காவி அடையாளத்துடன் இருப்பதால் கியூகட்டி நிற்கிறார்கள், அந்தக் கவர்ச்சி சாமியாரிடம் ஆசிவாங்க.
 

வெப்துனியாவைப் படிக்கவும்