இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான உணர்வைக் காட்டவே நடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்பதால், நடிகர் சங்க உண்ணாவிரதத்தை மீடியா படம் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறையும் என்பதாலும், மீடியா முழுக்க நடிகர்களைக் கவர் பண்ணுவதில் இருக்கும். இதனால் கமல் உள்ளிட்டோரும் இதனையே வலியுறுத்தினார். இந்நிலையில் மீடியா கவரேஜ் இல்லாமல் நடிகர் சங்க உண்ணாவிரதம் நடந்து வருகிறது. படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகர் சங்கமே எடுத்து அனுப்பி வருகிறது.