இந்நிலையில் ஆரம்பம் முதலே ஜூலியை வைத்தே ஆர்த்தி, காயத்ரி போன்றவர்கள் வம்பு சண்டை போட்டனர். தற்போது அதில் சக்தி, ஆரார், சினேகன், நமீதா ஆகியோரும் இணைந்துள்ளனர். சக போட்டியாளர்கள் ஜூலியை மிகவும் கேவலாமாகவும், அசிங்கமாகவும் பேசி வருகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியின்போது ஜூலி ஆராரை பிடித்திருப்பதாக காயத்ரியிடம் கூறினார். ஆனால் ஜூலி ரகசியமாக கூறியதை காயத்ரி மற்றவர்களிடம் கூறி கிண்டல் செய்து வருகிறார். தற்போது சக்தியும் மற்ற போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு ஜூலியை ரொம்ப மட்டம் தட்டி பேசி வருகின்றனர். காயத்ரியும், ஆராரும் சேர்ந்து மிகவும் தகாத முறையில் ஜூலியை விமர்சித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.