இதுவரை ஆரவ்-ஓவியா ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில், ஆரவ் தனக்கு ஓவியா மீது காதல் வந்ததே இல்லை என்று சினேகன் முன்னிலையில் உறுதியாக அடித்து சத்தியம் செய்து ஓவியாவிடம் கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஓவியா ஓகே இனிமே என் பின்னால் வராதே. கெட் லாஸ்ட், நான் யாருக்கும் ரெண்டாவது சான்ஸ் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் ஓவியா ஆரவ் காதல் அல்லது ஓவியாவின் ஒருதலை காதல் நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இதனை தொடர்ந்து நேர்று வெளியிடப்பட்ட ப்ரொமொ வீடியோவில் ஓவியா, டாஸ்க்கில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி தனியாக அமர்ந்துள்ளார்.