உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்

வெள்ளி, 28 நவம்பர் 2014 (08:55 IST)
முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி லிவர் சம்பந்தமான நோயால் அவதிப்படுவதாகவும், லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் தற்போது சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சில தினங்கள் முன்பு இணையத்தில் செய்தி வெளியானது (நமது தளத்தில் அல்ல).
 
அடிப்படை ஆதாரமற்ற இந்த செய்தியை வெளியிட்டவர்களை தனது அறிக்கையில் விளாசியிருக்கிறார் டிஸ்கோ சாந்தி.
 
சென்னையில் மஞ்சள் காமாலைக்கு நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என்னுடைய சகோதரி லலிதா குமாரி என்னை கவனித்துக் கொண்டார். இப்போது நலமாக இருக்கிறேன். லிவர் சம்பந்தமான நோயால் அவதிப்படுகிறேன் என்று எப்படி செய்தி வெளியிட்டார்கள் என்றே தெரியவில்லை. சில இணையப் பத்திரிகைகளில் வந்த தவறான செய்தியால் ஹைதராபாத்தில் வசிக்கும் என்னுடைய இரு மகன்களும் கவலையடைந்துள்ளனர். தேவையில்லாமல் தவறான செய்தி வெளியிட்டு பயமுறுத்தாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
 
டிஸ்கோ சாந்தியின் கணவரும் நடிகருமான ஸ்ரீஹரி சமீபத்தில்தான் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்