என்னதான் புலி புரண்டாலும், விஜய் படத்தை இயக்க இன்னும் ஆவலாகத்தான் உள்ளது இயக்குனர்கள் வட்டாரம். விஜய்யிடம் கதை சொல்ல, கால்ஷீட் வாங்க இரண்டு டஜன் இயக்குனர்களாவது காத்திருக்கிறார்கள். அதில் அதிர்ஷ்டத்தின் எல்லைக்கோட்டில் நிற்பவர்கள் மட்டுமே அரை டஜன் இருப்பார்கள்.
சசிகுமார், பரதன், மோகன் ராஜா, எஸ்.ஜே.சூர்யா என பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அத்துடன் ஹரி பெயரும் சமீபமாக அடிபடுகிறது. சிங்கம் 3 பட வேலைகளில் இருப்பவர், விஜய்யை வைத்து படம் எடுக்கவும் ஆவலாக இருப்பதாக கூறுகின்றனர்.