இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா?... அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (16:58 IST)
இயக்குனர் ராம் இயக்கும் ஏழமலை ஏழுகடல் என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். இதை சிவா, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு ஜானர்களில் படங்களை உருவாக்கி வரும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்