1988-ஆம் ஆண்டு விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘செந்தூரப்பூவே’. இப்படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ் [வயது 62].
வெள்ளி விழா கொண்டாடியது இந்த திரைப்படம். மனோஜ்-கியான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள், வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்து. ’கிளியே.. இளங்கிளியே..’, ’சோதனை தீரவில்லை’, ‘செந்தூர பூவே இங்கு தேன் சிந்தவா’, ’ஆத்துக்குள்ளே ஏலோலே’ என அத்தானை பாடல்களும் ஹிட் ஆயின.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் கோவையில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் சென்றார். கர்னூல் அருகே கார் விபத்துக்குள்ளானதில் தேவராஜ் பலியாகியுள்ளார். பி.ஆர்.தேவராஜின் மறைவுக்கு பல்வேறு திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.