‘’தங்கலான்’’ படத்தின் அப்டேட் வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

வியாழன், 29 டிசம்பர் 2022 (17:27 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளாவிகா மோகனன் , பார்வதி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக  உருவாகி வரும் படம் தங்கலான்.

கன்னட சினிமாவில் வெற்றி பெற்ற கேஜிஎஃப் போன்று இப்படமும், கோலார் தங்க வயல் உருவாகக் காரணமான தமிழர்களின் வரலாற்றைப் இப்படத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும்  இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்கப்பட்டது.

சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் புதிய தகவலை பா ரஞ்சித் கூறியுள்ளார்.

ALSO READ: விக்ரமின் பான் இந்தியா படம்: மற்ற மொழிகளிலும் தங்கலான் பட போஸ்டர் ரிலீஸ்
 
அதில், இப்போதுதான் கேஜிஎஃப்-ல் இருந்து படக்குழு வந்திருக்கிறோம். ரொம்ப நன்றாக படம் உருவாகி வருகிறது. மீண்டும் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜனவரி மாதம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்