மீண்டும் ஹீரோவாகும் ஜெயம் ராஜா

திங்கள், 20 ஏப்ரல் 2015 (12:00 IST)
ஜெயம் படத்தின் மூலம் இயக்குனரான ராஜாவுக்கு ஜெயம் அடைமொழியாக அமைந்துவிட்டது. தற்போது தனி ஒருவன் படத்தை தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்து வருகிறார்.
 
இந்தப் படத்துக்கு முன்பு, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் ஜெயம் ராஜா ஹீரோவாக நடித்தார். இப்போது மீண்டும் ஒரு ஹீரோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
 
ராம்கியை வைத்து ‘பாஸ்மார்க்’ என்ற படத்தை இயக்கிய பாலாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் நடுத்தர வயதுடைய ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஜெயம் ராஜா நடிக்கிறார். 
 
இந்த கதையை கேட்டவுடனேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஜெயம் ராஜா. ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். இப்படத்தை ஜெயசீலன் என்பவர் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்