கிராமத்து அழகியலை தத்ரூபமாக வடிக்கும் அந்த இயக்குநர், இரண்டாவது படத்திலேயே தேசிய விருது வென்றவர். சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த பாடல் என மூன்று தேசிய விருதுகளை வென்றது அந்தப் படம்.
சமீபத்தில் ஒரு பாடலுக்காக கவிஞருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதே இயக்குநரின் படத்தில் தான் அந்தப் பாடலை எழுதியிருந்தார் கவிஞர். வழக்கம்போல் பேட்டிகளில் முழங்கித் தள்ளிய கவிஞர், இயக்குநரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எந்த இடத்திலும் சொல்லவில்லையாம்.