கடந்த வருடம் மர்மமான முறையில் பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார் கலாபவன் மணி. விஷம் குடித்து இறந்ததாக அவருடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னதால், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் கொடுத்து யாராவது கொன்றார்களா எனத் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், “திலீப்பும், என் அண்ணனும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு இருந்தது. தற்போது நடிகை வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதால், என் அண்ணனின் மரணத்திலும் திலீப் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்” எனப் புகார் கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணா. இந்தப் புகாரை, சிபிஐ விசாரிக்கிறது.