பீட்டாவின் விருது எனக்கான அவமானம்: தனுஷ் பேட்டி!!

வெள்ளி, 20 ஜனவரி 2017 (15:36 IST)
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் தான் பீட்டா அமைப்பில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


 
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் நடிகர் தனுஷ், எந்த அரசியல் தலைவவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், சாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் ஒரே உணர்வோடு மிகவும் கண்ணியமாக நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து வியந்து தலை வணங்குகிறேன் என்றார்.
 
மேலும், முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகின்றவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாக கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்