தனுஷ் ஒரு பச்சோந்தி என கருத்து தெரிவித்த கெளதம் மேனன்!!

வியாழன், 17 நவம்பர் 2016 (10:24 IST)
கெளதம் மேனன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனுஷ் ஒரு பச்சோந்தி. எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ, அதற்கேற்றவாரு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை தனுஷிடம் இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 
கெளதம் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் தனுஷை வைத்து இயக்கியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், தனுஷ் மற்றும் சிலம்பரசன் ஆகியோரின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
 
சிம்புவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்பவராக இருந்தாலும் சில நேரங்களில் அவரின் கவனம் கதாபாத்திரத்தில் இருந்து சிதறிவிடும் என்று கூறினார். மேலும் பல மனக்கசப்புகள் இருந்தாலும் தற்போது வரை சூர்யா தனக்கு நல்ல நண்பர் எனவும், கூடிய விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தின் பணிபுரிய கூடிய சூழல் ஏற்படும் எனவும் கெளதம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்