குடித்துவிட்டு தன்ஷிகாவின் கையைப் பிடித்து இழுத்த இளைஞர்கள்

புதன், 17 டிசம்பர் 2014 (10:54 IST)
தன்ஷிகா காத்தாடி படத்தின் பாடல் காட்சியில் நடிக்க கேரளாவின் வாகமண்ணுக்குக்கு சென்றிருந்த போது, குடித்துவிட்டு சிலர் கலாட்டா செய்ததுடன் அவரது கையைப் பிடித்து இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வாகமண்ணில் பாடல் காட்சியை இயக்குனர் கல்யாண் எடுத்துக் கொண்டிருந்த போது மது போதையில் இருந்த சில இளைஞர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். தன்ஷிகாவை பார்த்துவிட்டே செல்வோம் என்று அவர்கள் சொல்ல, கேரவனில் இருந்த தன்ஷிகா வெளியே வந்திருக்கிறார். 
 
தன்ஷிகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதனை தன்ஷிகாவின் மேனேஜர் மறுத்துள்ளார். அனைவரும் நிறை போதையில் இருந்ததால் முடியாது என்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து கலாட்டாவில் இறங்கியவர்கள் தன்ஷிகாவின் கையைப் பிடித்து இழுத்து வம்பில் ஈடுபட, படயூனிட் அவர்களை 'கவனித்து' கட்டிப் போட்டு போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளது. போலீசார் விரைந்து வந்து குடிபோதையில் இருந்தவர்களை கைது செய்தனர்.
 
இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்