பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. குழந்தை பிறக்கும் மாதம் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:01 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதோடு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தனது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கும் அவரது கணவர் ரன்வீர் சிங்குக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகை தீபிகா படுகோன் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் பிரிக்க போவதாகவும் வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து தங்கள் குழந்தையின் வருகையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளதையடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்