தீர்ப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார், நடிகர் சங்க தேர்தல் இதுவரை நியாயமாகவே நடைபெற்று வந்துள்ளது. விரைவில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பணிகளும் சீராக நடைபெற்று வந்தநிலையில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வரும் திங்கள்கிழமை இந்தத் தடையை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.