கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திவ்யா அங்கு வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக மத சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியினரே என்னை தோற்கடித்துவிட்டனர் என்று திவ்யா குற்றஞ்சாட்டியதோடு, கர்நாடகா காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான நடிகர் அம்பரீஷே எனது தோல்விக்கு காரணம் என பகிரங்கமாக கூறினார். இது குறித்து அவர் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.