அஞ்சலி பேயாகவும், பெண்ணாகவும் இரு வேடங்களில் நடித்த படம், கீதாஞ்சலி. 2014 -ல் வெளியான இப்படம் ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றது.
ராஜ் கிரன் இயக்கத்தில் ஸ்ரீனிவாச ரெட்டியும், அஞ்சலி, பிரம்மானந்தம் நடித்த இந்த பேய் படம் வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டது. சினிமா கதையாக வில்லனிடம் சொல்லப்படும் ஒரு பேய் கதை, உண்மையில் அந்த வில்லன் சம்பந்தப்பட்டது. அவன் கொன்ற பெண்தான் பேயாக இருக்கிறார்.