வைரமுத்துவுக்கு வாழ்த்து சொன்ன நெட்டிசனை ‘பொறுக்கி’ என திட்டிய சின்மயி!

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:48 IST)
வைரமுத்துவிற்கு வாழ்த்து கூறிய நெட்டிசனை பொறுக்கி என சின்மயி திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாடகி சின்மயி அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது தெரிந்ததே. தன்னுடைய குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்ததாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டிய நிலையில் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்மயி பகிர்ந்திருந்தார். 
 
இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன், ‘வைரமுத்து சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என கூறியிருந்தது சின்மயிக்கு கடும் ஆத்திரத்தை எழுப்பியது. இதனையடுத்து அவரை பொறுக்கி என்று கூறிய சின்மயி நம்ம ஒரு பொறுக்கி பொறுக்கி தான் என்றும் வளர்ப்பு அப்படி என்றும் பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்