சேரனின் அப்பாவின் மீசை படத்துக்கு தடை

செவ்வாய், 23 ஜூன் 2015 (16:25 IST)
தான் இயக்கிய படத்தையே வெளியிட முடியாத நெருக்கடியில், ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை படத்தை சேரன் தயாரித்தார். அவர் அதையாவது செய்தாரே என்று முந்திக்கொட்டையாக யாரும் நற்சான்றிதழ் தர முயல வேண்டாம்.
 
அப்பாவின் மீசை படத்தில் பணியாற்றிய பலருக்கும் - குறிப்பாக சொற்ப சம்பளம் வாங்கும் உதவி இயக்குனர்களுக்கும் இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளார் சேரன். இந்நிலையில் ரவிபிரசாத் ஃபிலிம் லேப்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அப்பாவின் மீசை படத்தை இந்த மாதம் 29 -ஆம் தேதிவரை வெளியிட தடை வாங்கியிருக்கிறது.
 
அப்பாவின் மீசை படத்தை தயாரிக்க 2012 -இல் 25 லட்சங்கள் இந்த நிறுவனத்திடம் கடன் வாங்கியிருக்கிறார் சேரன். படத்தை வெளியிடும் முன்பு கடனை திருப்புவதாக ஒப்பந்தம். கடனை திருப்பாமல் படத்தை சென்சாருக்கு அனுப்பியதால் வழக்குப் போட்டு தடையும் வாங்கியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்