சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஆனந்த், லிட்டில் ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் உமாபதியால் - அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்தவர் - கட்டப்பட்டது சாந்தி திரையரங்கம். அதனை அவரிடமிருந்து 1962 -இல் சிவாஜி கணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜி மற்றும் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் அதில் திரையிடப்பட்டு வந்தது.