இயக்குனர் பாலா படத்தில் நடத்த மாற்றம்!

புதன், 29 ஜூன் 2022 (21:57 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இதையடுத்து,  வர்மா படம் தொடர்பாக பாலாவுக்கும் விக்ரமுக்கும் பிரச்சனை எழுந்தது. பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படம் குறித்து, தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்போது சூர்யா, இயக்குனர் பாலாவோடு இணைந்து பணியாறி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு, இயக்குனர் பாலா ‘கடலாடி’ என்ற தலைப்பை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நியையில் இயக்குனர் பாலாவை பற்றிய ஒரு தகவல் பரவி வருகிறது. பாலாவின் ஒவ்வொரு படத்திலும் ஹீரோயின் கள் உண்மை நிறத்தைவிட கருமை நிறம் பூசி நடிப்பது வழக்கம் எனவும், ஆனால், சூர்யா- பாலா படத்தில் நாயகி கீர்த்தி தேவதை போன்ற தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுவரை அவரது தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்