சிபிஐ விசாரணை... முதல்வரை சந்தித்து கலாபவன் மணி உறவினர்கள் கோரிக்கை

சனி, 4 ஜூன் 2016 (16:44 IST)
கலாபவன் மணியின் மரணம் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.


 


 மணியில் உடல் உள்ளுறுப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்து படிந்திருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது வலுப்பெற்றுள்ளது.  
 
புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் பினராய் விஜயனை மணியின் சகோதரரும், உறவினர்களும் திருவனந்தபுரம் சென்று சந்தித்தனர். கேரள போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குறைபட்டுக் கொண்ட அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
இதன் காரணமாக கலாபவன் மணியின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்