மாயவன் படத்தின் கதையை எழுதிவிட்டு அதனை நலன் குமாரசாமியிடம் படிக்கத் தந்திருக்கிறார் சி.வி.குமார். அந்த கதையை நலனை வைத்து இயக்குவது சி.வி.குமாரின் திட்டம். ஆனால், சி.வி.குமாரின் கதைக்கு திரைக்கதை அமைத்த நலன், நீங்களே படத்தை இயக்குங்கள் என்று தைரியம் சொல்ல, சி.வி.குமாரும் இயக்குனர் தொப்பியை துணிந்து அணிந்திருக்கிறார்.