சி.வி.குமாரை இயக்குனராக்கிய நலன் குமாரசாமி

திங்கள், 27 ஜூன் 2016 (11:02 IST)
தயாரிப்பாளர் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் இப்போது இயக்குனரும்கூட. அவர் இயக்கிவரும் மாயவன் இறுதிகட்டத்தில் உள்ளது.




படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறியவர், தான் இயக்குனரானதற்கு காரணமானவரையும் குறிப்பிட்டார்.
 
மாயவன் படத்தின் கதையை எழுதிவிட்டு அதனை நலன் குமாரசாமியிடம் படிக்கத் தந்திருக்கிறார் சி.வி.குமார். அந்த கதையை நலனை வைத்து இயக்குவது சி.வி.குமாரின் திட்டம். ஆனால், சி.வி.குமாரின் கதைக்கு திரைக்கதை அமைத்த நலன், நீங்களே படத்தை இயக்குங்கள் என்று தைரியம் சொல்ல, சி.வி.குமாரும் இயக்குனர் தொப்பியை துணிந்து அணிந்திருக்கிறார்.
 
மாயவன் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவும், சி.வி.குமாரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். விரைவில் டீசர், சிங்கிள் டிராக் என்று விளம்பரம் தடதடக்க உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்