எந்தப் படத்தை எடுத்தாலும் நாயகனோ, நாயகியோ இல்லை வில்லனோ கோக், பெப்சி தயாரிப்புகளை குடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம்பெறும். அதன் போஸ்டரையாவது ஒரு காட்சியில் காட்டுவார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரின் இனிவரும் படங்களில் கோக், பெப்சி தயாரிப்புகள் இடம்பெறாது. அவரோ அதனை அறிவித்துள்ளார்.
விவசாயிகள் வறட்சி காரணமாக கொத்து கொத்தாக மடிந்து வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால்தான் இந்த வறட்சி. கோக், பெப்சி நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதும் இதற்கு ஒரு காரணம். அதனாலேயே இந்த முடிவை சி.வி.குமார் எடுத்துள்ளார்.