சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்கும் அஜித் படத்தயாரிப்பாளர்

புதன், 27 நவம்பர் 2019 (21:54 IST)
சிவகார்த்திகேயன் தற்போது ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அவர் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் இயக்கி வந்த படம் பாதியில் நிற்கின்றது. அதேபோல் லைகா தயாரிக்கவிருந்த சிவகார்த்திகேயன் - விக்னேஷ்சிவன் படமும் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டது.
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றிவிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது இந்த படத்தையும் தயாரிக்க போனிகபூர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
போனிகபூர் தற்போது ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களை தயாரிக்கும் போனி கபூர், அடுத்து தமிழில் அதிக படங்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், தனது இரண்டு மகள்களையும் தமிழில் நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்