பாலியல் பலாத்காரத்தை மறந்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் பாவனா

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (23:31 IST)
சமீபத்தில் நடிகை பாவனா மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால் இந்த அதிர்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் மீண்டு தற்போது அவர் இயல்பு நிலைக்கு அவர் திரும்பிவிட்டதாக தெரிகிறது. தனக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதற்காக அவர் திரையுலகினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.




இந்நிலையில் ஜினு ஆபிரஹாம் இயக்கும் 'ஆதம்' என்ற படத்தில் நடிக்க தயாராகிவிட்டாராம் பாவனா. பிரித்விராஜுக்கு ஜோடியாக பாவனா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த வாரம் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்