மீண்டும் திரையரங்கை மையப்படுத்திய படம் - பானுப்ரியா நடிக்கிறார்

சனி, 27 ஆகஸ்ட் 2016 (19:12 IST)
திரையரங்கை மையப்படுத்தி வந்த வெயில் திரைப்படம் வெற்றி பெற்றது. அதேபோல் ஒரு படம் தமிழில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.


 
 
அகடம் படத்தை இயக்கிய முகமது ஐசக் நாகேஷ் திரையரங்கு என்ற படத்தை இயக்குகிறார். அறுபதுகளில் உள்ள திரையரங்கை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது. ஆரி நாயகன்.
 
இதில் ஆரியின் அம்மாவாக பானுப்ரியா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர், வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருவது முக்கியமானது.
 
ஜோதிகா நடிப்பில் பிரம்மா இயக்கும் படத்திலும் பானுப்ரியா முக்கியமான வேடமேற்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்