கர்ண கடூரமாக நாலைந்து சண்டைக் காட்சிகள், அதைவிட கொடூரமாக ஒரு காதல், சாதி பெருமையை பிரதிபலிக்ககும் நான்கைந்து வசனங்கள்... இந்த முக்கலவையை கிராமத்துப் பின்னணியில் சொன்னால் எந்த மொக்கப்படமும் ஹிட்டாகும் என்று சசிகுமார் நம்பியிருக்கிறார். இல்லையென்றால், கிடாரியைத் தொடர்ந்து பலே வெள்ளையத்தேவா என்ற பெயரில் படம் நடிப்பாரா...?
சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியுள்ளது. சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.