மீண்டும் இணைந்த ‘பாகுபலி’ டீம்

வியாழன், 19 அக்டோபர் 2017 (17:57 IST)
‘பாகுபலி’யில் நடித்த ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் மூவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.


 


சத்யசிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மடை திறந்து’. இந்தப் படத்தில், ‘பாகுபலி’ படத்தில் நடித்த ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மூவரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக ரெஜினா நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.  

இரண்டு மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படத்தை, கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி உருவாக்கிய ராணுவப்படையை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்